மேட்டூர்: கர்நாடக அணைகளில் நீர்திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று முன்தினம் 34,722 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை அது 27,985 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. திறப்பை விட வரத்து அதிகரித்துள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.