வேலூர் மத்திய சிறையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் செல்போன் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதிக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் மாலை 3.30 மணியளவில் சிறையில் அனைத்து பிளாக்குகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது ராஜீவ் கொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு மொபைல் போன் ஒன்றும், பேட்டரி மற்றும் சிம்கார்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார்   விசாரிக் கின்றனர்.

Related Stories: