பாகூர் : தவளக்குப்பம் என்.ஆர்.நகர் அருகே கடலூர்- புதுச்சேரி சாலையில் பழமைவாய்ந்த பாலம் உள்ளது. இது பழுதடைந்ததால் 15 வருடத்திற்கு முன்பு, அதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பழைய பாலத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படும்போது பழைய பாலம் வழியாக வாகன போக்குவரத்து திருப்பி விடப்படும். சமீபத்தில் இந்த பாலத்தில் ஒரு பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, நேற்று காலை இந்த பாலம் திடீரென உடைந்து 5 அடி உள்வாங்கியது.