சென்னை: சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது: சென்னை வந்துள்ள எனக்கு நீங்கள் தந்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் விருந்தோம்பல் சிறப்பாக இருக்கிறது. அதை கண்டு வியந்துவிட்டேன். பிரதமர் மோடி பேசும்போது, நாம் இருவரும் மனம்விட்டு நண்பர்களைப்போல் பேச வேண்டும் என்று கூறினார். பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நல்லுறவு நிலவுகிறது. இந்திய பிரதமர் சீனாவுக்கு விரைவில் வரவேண்டும் என்று அழைத்தேன். அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார். சீனாவின் 70வது சுதந்திர தின விழாவை இரு நாடுகளும் இணைந்து கொண்டாட முடிவு செய்துள்ளோம். சீனாவில் 35 நிகழ்ச்சிகளும், இந்தியாவில் 35 நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைந்து நடத்தப்படும்.