ஜகார்தா: ஜாவா தீவில், இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோவை (72), ஐஎஸ் ஆதரவு தம்பதியினர் கத்தியால் குத்தினர். இந்தோனேஷியாவின் பாதுகாப்பு அமைச்சர் விரான்டோ. இவர் நேற்று ஜாவா தீவுக்கு சென்றார். பாண்டேகிளாங் என்ற இடத்தில் அவர் காரை விட்டு இறங்கிய போது, அவரை ஒரு தம்பதியினர் கத்தியால் குத்தி தாக்கினர். உடனே, பாதுகாவலர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். வயிற்றில் 2 இடங்களில் கத்தி குத்து காயமடைந்த விரான்டோ, ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் ஜகார்தா கொண்டு செல்லப்பட்டார்.