ஸ்ரீகாளஹஸ்தி: காதல் கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காளஹஸ்தி சிவன் கோயில் அருகே தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியை கதறினார்.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(30). காளஹஸ்தி அடுத்த காலங்கியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். வரதய்யபாளையம் ஜில்லா பரிஷத் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரமணய்யா(32). இவர்கள் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால், சுப்புலட்சுமியின் மாமியார், மைத்துனர், கணவரின் சகோதரிகள் ஆகியோர் அவரை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி, காளஹஸ்தி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார், குடும்பத்தினரை அழைத்து சமரசம் செய்து வைத்தனர்.