ரோம்: பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா சபையில் உரையாற்றிய இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மையை இத்தாலியில் பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. இதில், சுவீடனில் இருந்து வந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என உலக நாடுகளை கடுமையாக சாடினார். இதற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவநிலை மாற்றத்தின் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.