வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே நடைபெறவுள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவர கடந்த 10 மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற 10ம் தேதி நடைபெறும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக சீன துணை பிரதமர் லியு ஹீ அமெரிக்கா செல்ல உள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்க தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல உள்ளனர்.