பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக காவிரி நீர்ப்பாசன வாரியம் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாவில் நீர்மின் உற்பத்தி திட்டத்திற்காக அணை கட்டுகிறோம்.இந்த இடத்தில் அணை கட்டுவதால் வன விலங்குகள், மரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. இத்திட்டத்தினால் நீர்மின் உற்பத்தி செய்வதுடன் குடிநீர் திட்டத்திற்கும் இது பயனுள்ளதாக அமையும்.