தேமுதிகவை சேர்ந்த ஏராளமானோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

சென்னை: தேமுதிகவை சேர்ந்த ஏராளமானோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தேமுதிகவை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்  ரவி தலைமையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விமல், கேசவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் ஆவடி ஜி.ராஜேந்திரன், திராவிட பக்தன், ஜே.ரமேஷ், பூவை ஜெரால்டு, ஆர்.டி.ஆதிசேஷன், ஒன்றிய, நகர செயலாளர் ஜெயக்குமார், எம்.ரவிக்குமார், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஜெயசீலன், எம்.ரமேஷ், கூடலூர் ராஜேந்திரன், அரிகிருஷ்ணன், மகாலிங்கம், சி.சு.ரவிச்சந்திரன், என்.இ.கே.மூர்த்தி, ரெட்ஹில்ஸ் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ஏரிகளை தூர் வார்வது தமிழக அரசின் வேலை. ஆனால், அரசு செய்யாத போது, மக்களின் நலன் கருதி, திமுக நிர்வாகிகள்- தொண்டர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு  சொந்த பணத்தில் செலவு செய்து, தங்கள் பகுதியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கிணங்க திருவள்ளூர் தெற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றியம், வேப்பூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லியம்மன் கோயில் குளம் மற்றும் ஆலங்குட்டை குளத்தை ரூ.27 லட்சம் செலவில் வேப்பூர் ஊராட்சி செயலாளர் எம்.இளையான் தூர்வாரி செப்பனிட்டார். “உலகத் தமிழ் பத்திரிகை” சார்பில், இவரது பணியை பாராட்டும் வகையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதையடுத்து, வேப்பூர் ஊராட்சி செயலாளர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திருவள்ளூர் தெற்கு மாவட்ட  செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: