மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜி போட்டி

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜியை பாஜக - சிவசேனா  கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில்  பாஜக , சிவசேனா, இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இக்கூட்டணியில் பால்டான் உள்ளிட்ட 6 தொகுதிகள் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வானே தலைமையில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பால்டான் தொகுதியில் சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜியை அக்கட்சி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்திய குடியரசு கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் தீபக் நிகல்ஜி, செம்பூர் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியடைந்தார், இருப்பினும் பால்டான் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், அவருக்கு அத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக இந்திய குடியரசு கட்சி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: