புதுவை: புதுவை வில்லியனூர் காவல் சரக எல்லைக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் அடுத்த ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ரவுடி ஜோசப் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோர் குறித்து விசாரிக்க மைக்கேல், சிவகுரு ஆகிய 2 போலீசார் நேற்று இரவு சென்றனர். முதலில் ரவுடி ஜோசப்பை அவரது குடும் பத்துடன் சேர்த்து போலீசார் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ஜோசப், அவரது தம்பி அருணாசலம் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகிய 3 ரவுடிகளும் சேர்ந்து 2 போலீசாரிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கினர். அவர்கள் தொடர்ந்து தாக்கியதால், போலீசார் உடனே தங்கள் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அவர்களை நடுரோட்டில் போட்டு ரவுடிகள் புரட்டி எடுத்தனர்.