விமானப்படை புதிய தளபதி பேட்டி பாலகோட் போன்ற தாக்குதலுக்கு தயார்

புதுடெல்லி: விமானப்படையின் புதிய தளபதியாக ராகேஷ் குமார் சிங்  பதவுரியா நேற்று பதவியேற்றுக் கொண்டார். தேசிய பாதுகாப்பு அகாடமியில்  பயற்சி முடித்த பதவுரியா கடந்த 1980ம் ஆண்டு ஜூனில் விமானப்படையில் போர் விமானியாக  சேர்ந்தார். போர் விமானங்களை இயக்குவது, வழிகாட்டுவது உள்பட பல்வேறு  பிரிவுகளில்  சிறந்து விளங்கியதற்காக, பல்வேறு விருதுகளை பெற்றவர். இவர் கடந்த  19ம் தேதி விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.  விமானப்படையின் 25வது தளபதியாக இருந்த பி.எஸ்.தனோவா நேற்றுடன் ஓய்வு  பெற்றதைத் தொடர்ந்து புதிய தளபதியாக பதவுரியா பதவியேற்றுக் கொண்டார். அதன்  பின்னர், டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.  பதவியேற்றபின் பேட்டியளித்த அவர், பாலகோட் போன்ற எந்த தாக்குதலுக்கும் விமான ப்படை தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

Related Stories: