ஆலந்தூர்: புகாரை வாங்க மறுத்த போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சாகிப் (30). இவர், கிண்டியில் உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கமிஷன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ஓட்டி வந்தார். சில தினங்களுக்கு முன்பு முகமது சாகிப், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிக்அப் ஒன்றை கேன்சல் செய்ததால் சக ஊழியர் திட்டியுள்ளார். இதனையடுத்து, முகம்மது சாகிப் தன்னை அவமானப்படுத்தியதாக தலைமை அலுவலகத்தில் முறையிட சென்றபோது, அங்கிருந்த செக்யூரிட்டி விரட்டியுள்ளார். இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.