வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கியது

புதுடெல்லி: சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ‘ரயில் 18’க்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டது. டெல்லி-வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதைத் தொடர்ந்து, டெல்லி-கத்ரா இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை வரும் 5ம் தேதி தொடங்குகிறது. டெல்லியில் வரும் 3ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து ரயிலை தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

Related Stories: