ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், தமிழகம் - பீகார் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த பீகார் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்தது. கேப்டன் பபுல் குமார் 110 ரன் (136 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), ரகமதுல்லா 38, கேஷவ் குமார் 35 ரன் விளாசினர். தமிழக அணி பந்துவீச்சில் முகமது 3 விக்கெட் கைப்பற்றினார்.