திண்டுக்கல்: திண்டுக்கல் முருகபவனம், மலைக்கோட்டை பின்புறம் உடைந்த பாலங்களால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். திண்டுக்கல் ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்டது முருகபவனம் இந்திராநகர். 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போது இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அடிப்படை வசதிகளோ ஊராட்சியாக இருந்த போததைவிட மிகவும் மோசமாக உள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் செல்லப்பாண்டி கூறுகையில், ‘இப்பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.