டெல்லி உள்பட வடமாநிலங்களில் நில அதிர்வு: ஆக்ரமிப்பு காஷ்மீரில் 19 பேர் பலி

புதுடெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள இந்தோ-பாக். எல்லை அருகே நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதிர்வை உணர்ந்த மக்கள் பலரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.நிலநடுக்கத்தால், ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானா, இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிரொலித்தது. இதனால் வீடுகள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி தகவல்கள் எதுவும் தெரியவில்லை. எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூரில் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், இதில் 19 பேர் உயிரிழந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.   ஆக்ரமிப்பு காஷ்மீரில்  அனைத்து மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: