மன்னார்குடி: மன்னார்குடி முத்துப்பேட்டை இடையிலான நெடுஞ்சாலையில் இடைச்சி மூலையிலிருந்து குறிச்சி வரை 10 கிமீ தூரத்திற்கு 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு அதனை உடன் சீரமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முத்துப்பேட்டை இடையே 30 கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினம் தோறும் 24 மணி நேரமும் பேருந்து, வேன், லாரி, மினி லாரி போன்ற கனரக வாகனங் கள் உள்ளிட்ட ஆயிரக்கனக்கான இருசக்ரவாகனங்களும் சென்று வருகின் றன. இந்த வழித்தடம் மூலம் முத்துப்பேட்டை, கோவிலூர், வண்டல்வெளி, பால வாய், செருகளத்தூர், சித்தமல்லி, குமட்டித்திடல், பெருகவாழ்ந்தான், மண்ணுக்கு முன்டான், இடைச்சிமூலை, பாலையூர், கெழுவத்தூர், குறிச்சி உட்பட 50க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் இச்சாலை வழியே மன்னார்குடி, திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், கோட்டூர் போன்ற முக் கிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அதிக அளவில் மக்கள் செல்லும் சாலையில் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் அருகே இடைச்சி மூலையிலிருந்து குறிச்சி வரை சுமார் 10 கிமீ தூரம் செல்லும் இச்சாலையின் மேல்புறம் பாமணி ஆறும், கீழ்புறம் பள்ளமான வாய்க்காலும் உள்ளது.