சீன ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா

பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார். சாங்ஸூ நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தைவானின் டாய் ட்ஸூ யிங்குடன் மோதிய கரோலினா 14-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-17, 21-18 என அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி சீன ஓபன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா, கடந்த ஜனவரியில் நடந்த இந்தோனேசிய ஓபன் தொடரின் பைனலில் விளையாடியபோது வலது காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த வாரம் வியட்நாம் ஓபனில் களமிறங்கிய அவர் முதல் சுற்றுடன் வெளியேறினார். இந்த நிலையில், சீன ஓபனில் அபாரமாக விளையாடி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

Related Stories: