பெண்ணாடம்: இரண்டு மாவட்டங்களை இணைக்கும் தற்காலிக மண்சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சவுந்திரசோழபுரம்-கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிகமாக செம்மண் கொட்டப்பட்ட மண் சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையை அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு, ஆலத்தியூர் உட்பட 20 கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இதேபோன்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாடம், சவுந்திரசோழபுரம் உட்பட 20 கிராம மக்கள் தஞ்சை, அரியலூர் செல்ல பயன்படுத்தி வந்தனர்.