இஸ்லாமாபாத்: சீனா உதவியுடன் 2022ம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முதல் முறையாக விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.