கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து: அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் பலி

வாஷிங்டன்: தெலங்கானாவை சேர்ந்த நிவேஷ் முக்கா(19), கவுதம் பார்சி(19) ஆகியோர் அமெரிக்காவின் அரிசோனா பல்கலை கழகத்தில் சர்வதேச மாணவர்களாக படித்து வந்தனர். இருவரும் கடந்த 20ம் தேதி வாடகை கார் ஒன்றில் ஸ்டேட் ரூட் 74 வடக்கே உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது லேக் பிளசன்ட் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக பல்வேறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து: அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: