கொழும்பு: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முன்னணி வீரர்கள் விலகிய போதும், பாகிஸ்தான் சென்று விளையாட இளம் வீரர்கள் கொண்ட இலங்கை அணியை தேர்வு செய்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தால் காரணமாக ஏற்கனவே இத்தொடரை பல முன்னணி வீரர்களான நிரோசன் டிக்வெல்லா, குசல் பெரேரா, தனஞ்செயா டி சில்வா, திசரா பெரேரே, அகில தனஞ்செயா, லசித் மலிங்கா, ஆங்க்லோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சண்டிமால், திமுத் கருணாரத்னே ஆகியோர் நிராகரித்து விட்டனர். எனவே, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடவுள்ள இளம் இலங்கை கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு வாரியம் அறிவித்தள்ளது. ஒருநாள் தொடருக்கு லகிரு திரிமன்னே கேப்டனாகவும், டி20க்கு தசுன் ஷனகா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் அணி வீரர்கள் விபரம்: லகிரு திரிமன்னே (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, சதிரா சமர்விக்ரமா, அவிஸ்கா பெர்ணாண்டோ, ஒசாடா பெர்ணாண்டோ, செனகான் ஜெயசூர்யா, தசுன் ஷனகா, மினோத் பானுகா, ஆங்க்லோ பெரேரா, வாகிண்டு ஹாசரங்கா, லக்ஷன் சான்டகன், நூயுவான் பிரதீப், இஸ்ரு உதானா, கசுன் ரஞ்சிதா, லகிரு குமாரா.