துபாய்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம், தங்களுக்கு அதிருப்தியை தருவதாக அமைந்தது என்று துபாய்வாழ் தமிழ் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரமான துபாய் வந்தபோது பிசினஸ் லீடர்ஸ் போரம் என்ற அமைப்பின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் தமிழக தொழிலதிபர்கள் மற்றும் தமிழர்களோடு தனி நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை இதுகுறித்து துபாய் வாழ் தமிழர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதல்வரின் நிகழ்ச்சிநிரல் குறித்து அவர் வரும் வரை வெளிப்படையான தகவல் இல்லாததால் பெரும்பாலானோர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு பெரும்பாலான தமிழ் தொழில் அதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.