புதுடெல்லி: “நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்கிறது” என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நாள்தோறும் பொருளாதார மந்தநிலை குறித்த தனது கருத்துக்களை கூறி வருகிறார்.