புதுடெல்லி: தேசத்துரோக வழக்கில், ஜே.என்.யூ முன்னாள் மாணவி ஷீலா ரஷீத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஷீலா ரஷீத், இவர் சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதி வரும் இவர் காஷ்மீரைச் சேரந்தவர் ஆவார். ஆனால், தமது பதிவுகள் மூலம் தொடர்ந்து தேசத்திற்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, இந்திய ராணுவம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட வேண்டும், என்று கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவஸ்த்தவா ஷீலா ரஷீத்துக்கு எதிராக ஒரு கிரிமினல் புகார் ஒன்றைத் தாக்கல் செய்தார்.