மால்கங்கிரி: ஒடிசாவில் முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர், விமானி ஆகி உள்ளார். அவருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த மால்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மரினியாஸ் லக்ரா. இவர் காவல்துறையில் ஹவில்தாரராக இருக்கிறார். இவரது மகள் அனுப்பிரியா அங்குள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். பின்னர் செமிலிகுடாவில் மேல்நிலைப்படிப்பை நிறைவு செய்தார். பொறியியல் படிப்பை தேர்வு செய்து படித்த அவர் அதனை பாதியில் கைவிட்டார். இந்நிலையில், அனுப்பிரியா கடந்த 2012ம் ஆண்டு விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து பைலட் ஆகும் முயற்சியை தொடங்கினார்.