ஜம்மு: காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று காலை காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. காலை 10 மணி அளவில் சுந்தர்பானி மற்றும் நவ்ஷேரா செக்டர்களில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டர் ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.