வீரவநல்லூர்: திருவிருத்தான்புள்ளி ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சேரன்மகாதேவி அடுத்த திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணிப் பெருந்திருவிழாவானது கடந்த 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6 மணிக்கு இனிப்பு தர்மம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. திருவிழாவில் இன்று (8ம் தேதி) இரவு 8 மணிக்கு அய்யா நாகத் தொட்டில் கிருஷ்ணன் கோலத்தில் ஊஞ்சலாடும் வைபவம், வரும் 12ம் தேதி இரவு ஜி.என்.சிவச்சந்திரன் அருளிசை வழிபாடு,