இஸ்லாமாபாத்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணிக்கும் விமானம், தனது நாட்டின் வழியாக செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது.காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா உடனான தூதரக உறவை முறித்து கொண்ட பாகிஸ்தான், ரயில், பேருந்து சேவைகளை நிறுத்தியது. மேலும், பாகிஸ்தானில் உள்ள முக்கிய வான்வழிகளில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விமானங்கள் பறக்கவும் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு நாளை அரசுமுறைப் பயணம் செல்ல இருக்கிறார். இப்பயணத்தின் போது, அவர் அந்நாட்டு தலைவர்களுடன், புல்வாமா தாக்குதல் உள்பட இந்தாண்டு நடந்த வன்முறை தாக்குதல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், அவரது விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்ல, மத்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் அரசின் அனுமதி கோரியது.