புழல்: செங்குன்றம் அருகே எடப்பாளையத்தில் காதல் திருமணம் செய்த தகராறில் வீடு புகுந்து மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் திருவள்ளூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பவன் (எ) முனுசாமி (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜி (58). இவர்களது மகள் உமா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உமா அதே பகுதி மணிகண்டன் (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்தே மாமனாருக்கும், மருமருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மணிகண்டன் தனது நண்பர்கள் 8 பேருடன் மாமியார் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மாமனார் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார்.