புஷ்கர்: ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. இதில், காஷ்மீர் நிலவரம், ராமர் கோயில் விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்.சின் துணை அமைப்புகளான பாஜ உள்ளிட்ட 35 அமைப்புகளின் 200 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமை வகிக்கிறார். பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். இக்கூட்டத்தில் காஷ்மீர் நிலவரம், ராமர் கோயில், பொருளாதார நிலை, நாட்டின் பாதுகாப்பு, எல்லையின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.