புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கயிருப்பதால் சட்டப்பேரவை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சட்டப்பேரவை கூடும் போது வழக்கமாக பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி 2019-20-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி துணைநிலை ஆளுநர் உரை இடம்பெறுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் பேரவை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் ஆளும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்தும், பேரவையில் எதிர்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் மாளிகையான ராஜ்நிவாஸில் ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து பேசியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: