புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சட்டப்பேரவை கூடும் போது வழக்கமாக பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி 2019-20-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி துணைநிலை ஆளுநர் உரை இடம்பெறுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் பேரவை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.