உபி.யில் கொடூரம் போலீசில் புகார் கொடுத்த சிறுமியை எரித்து கொன்ற வாலிபர்

சிதாப்பூர்:  உத்தரப்பிரதேச மாநிலம், சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஜிபூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமியிடம், அதே பகுதியை  சேர்ந்த கோலு என்ற வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து  போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் கோலுவை எச்சரித்து அனுப்பினர்.. இந்நிலையில், கடந்த புதன்கிழமை சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவர் மீது மண்னெய்யை ஊற்றி  தீ வைத்துவிட்டு கோலு தப்பிச் சென்றார்.  அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று இறந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கோலுவை கைது செய்தனர்.

Related Stories: