ஓட்டப்பிடாரம்: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(58). விவசாயியான இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மகன் முருகேசன்(25). தனியார் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 19ம்தேதி இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.