மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை

ஓட்டப்பிடாரம்: மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(58). விவசாயியான இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மகன் முருகேசன்(25). தனியார் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 19ம்தேதி இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து சகஜ நிலைக்கு பாலசுப்பிரமணியன் திரும்பாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டிலுள்ள அனைவரும் வீட்டின் முன்பக்க பகுதியில் இருந்துள்ளனர். அப்போது பாலசுப்பிரமணியன் பின்பக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: