திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கு தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலான குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. அதன்படி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கும் தண்ணீர் வந்துள்ளது. ஏரி முழுமையாக நிரம்பாவிட்டாலும் பாதியளவு தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.