டெல்லி: ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2007 ல் ஐ.என்.எக்ஸ். நிறுவனம் ரூ.305 கோடி நேரடி அந்நிய முதலீடு பெற்றதில் முறைகேடு என புகார் எழுந்தது. இதனால் ப.சிதம்பரம் 2018 ல் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளார்.