திருச்சி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டமைப்புகள் உள்ளதா என கணக்கெடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். பருவமழை தொடங்கும் முன் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யவும், மழைநீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களில் உடனடியாக அவற்றை அமைக்கவும், திருச்சி மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக மீண்டும் செயல்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில், மாநகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும், பருவமழையால் கிடைக்கும் நீரைச் சேமிக்கவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.