புதுடெல்லி: மத்திய துணை ராணுவப் படையில் காலியாக உள்ள 84 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. மத்திய துணை ராணுவப் படையில் மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, சாஸ்திர சீமா பால், இந்தோ- திபெத்திய எல்லை போலீஸ் படை போன்றவை இடம் பெற்றுள்ளன. இவற்றில் தற்போதைய நிலவரப்படி 84 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: மத்திய ஆயுதப் படையில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள், மற்றும் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது, 84 ஆயிரத்து 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.