பாட்னா: பீகாரில் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பீகாரில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இடி, மின்னலுடன் அடித்து வெளுத்த இந்த மழையால் 10 பேர் வரை பலியாகி உள்ளனர்.