சிவகாசி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் தோல்வியால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, முதல்வர் அமைச்சர்களை முடுக்கிவிட்டுள்ளார். குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக விருதுநகரை வைத்துள்ளோம்.