புதுடெல்லி: ‘மக்களவை துணை சபாநாயகர் பதவி எங்களுக்கு வேண்டாம்’ என ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜ எம்பி ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்பதவியை நாடாளுமன்றத்தின் 4வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் 22 எம்பி.க்களை கொண்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வழங்க, பாஜ மேலிடம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்பதவி வேண்டாம் என அக்கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே மறுத்துள்ளார்.இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘
துணை சபாநாயகர் பதவி தருவதாக நேரடியாகவோ, தனிப்பட்ட முறையிலோ எங்களை யாரும் அணுகவில்லை. ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எங்களை பொறுத்த வரையில் துணை சபாநாயகர் பதவியை ஏற்க விரும்பவில்லை.