உடன்குடி: திருச்செந்தூர் அருகே புன்னைநகர் வனத்திருப்பதி நிவாசபெருமாள் கோயில், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வருஷாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.30 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 10 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆழ்வார்திருநகரி ரங்கராமானுஜ ஜீயர் ஆசி வழங்கினர்.