திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா ஒய்.வி.சுப்பாரெட்டி. இவருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை ஜெகன் ஒதுக்கினார். அதன்படி அவர் நேற்று திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு பதவியேற்றார். பின்னர் சுப்பாரெட்டிக்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவி வழங்கியபோது இந்து தர்மத்தை காப்பாற்றும் விதமாகவும் திருமலையின் புனிதத்தன்மை, ஆகம விதிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு எந்த விதத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளிக்க முடியுமோ அவ்வாறு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.