காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதி நடக்கவுள்ள நிலையில் காவிரி ஓழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: