பஞ்சாப்: இந்தியாவிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தியாவிடம் தோற்ற சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்கப்பட்டுள்ளது. இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழுவை கலைக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.