சேலம்: ஜீன்ஸ் பேன்ட், டிசர்ட் அணிய சேலத்தில் தனியார் கல்லூரி தடை விதித்து திருப்பி அனுப்பியதால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் உடையாப்பட்டி அருகே இயங்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மாணவர்களின் பெற்றோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், நீதிமன்ற உத்தரவின்படி தங்களது குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும்போது, நல்ல ஆடை அணிந்து வரும் படி அறிவுறுத்த வேண்டும். தலைமுடியை அழகாக வெட்டியிருக்க வேண்டும். ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் அணியக் கூடாது. மாணவிகள் லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளும் அணியக் கூடாது. கல்லூரியில் மகன் மற்றும் மகளை சேர்க்கும்போது நீங்கள் கொடுத்த உறுதி மொழியை பின்பற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் டிசி (மாற்றுச்சான்றிதழை) வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்.