பதான்கோட்: ‘‘காட்டுமிராண்டிதனமான குற்றத்துக்கு நேரடியான ஆதாரம் இல்லையென்றாலும், நியாயமான நீதி அளிக்கப்பட வேண்டும்’’ என கதுவா சிறுமி பலாத்கார வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது பழங்குடியினச் சிறுமி ஒருவர் கடந்தாண்டு ஜனவரி மாதம் பலாத்கார கொலை செய்யப்பட்டார். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுமியை, ஒரு கோயிலில் அடைத்து வைத்து ஒரு கும்பல் 4 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றது.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி அளித்த தீர்ப்பில், குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், சம்பவத்தை மறைக்க, லஞ்சம் பெற்று உடந்தையாக இருந்த போலீசாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. 432 பக்கத்தில் நீதிபதி தேஜ்விந்தர் சிங் அளித்த தீர்ப்பின் நகல் இப்போதுதான் வெளியானது. அதில் குற்றவாளிகளுக்கு எதிராக நேரடி ஆதாரம் இல்லாத நிலையில், தண்டனை வழங்கப்பட்டது ஏன் என்பதை நீதிபதி விரிவாக விளக்கியுள்ளார். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான 57 வக்கீல்கள் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், ‘‘இந்த பலாத்கார கொலை வழக்கில் எந்த குற்றவாளிகளுக்கும் எதிராக நேரடி ஆதாரம் எதுவும் இல்லை’’ என கூறியிருந்தனர். இதற்கு பதில் அளித்து நீதிபதி கூறியிருந்ததாவது: