புதுடெல்லி: ‘‘எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு மீது தீவிர சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு பயன்படுத்துவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார். அவர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்தின் செயல்பாடு மீது ஒவ்வொருவரும் சந்தேகப்படுகின்றனர். இது மிகவும் முக்கியமான விஷயம். அமெரிக்கா உட்பட பல நாடுகள் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பிவிட்டன என நினைக்கிறேன். சந்தேகம் எழுந்துள்ளதால், தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப ேவண்டும். இதற்காக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பை வாக்குச் சீட்டில் நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பு தே.ஜ கூட்டணிக்கு சாதகமாக இருந்தால் நல்லது. குறைந்தபட்சம் சந்தேகம் தீரும்.